Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/எர்ணாபுரத்தில் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எர்ணாபுரத்தில் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எர்ணாபுரத்தில் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எர்ணாபுரத்தில் பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : செப் 06, 2011 01:57 AM


Google News
நாமக்கல்: எர்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் நின்று செல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில், எட்டு கி.மீ., தூரத்தில் எர்ணாபுரம் உள்ளது. எர்ணாபுரத்தை சுற்றி சிலுவம்பட்டி, செங்கோடம்பாளையம், நீலியங்காட்டுப்புதூர், மாரப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவனத்துக்கு செல்லும் அலுவலர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் என பலரும் எர்ணாபுரம் வந்து, பஸ் பிடித்து செல்கின்றனர். தினமும், 200க்கும் மேற்பட்டவர்கள் எர்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ் ஏறுகின்றனர். நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பஸ்கள் அங்கு நிற்காததால், பயணிகள் கலெக்டர் அலுவலகத்தில் இறங்கி, இரண்டு கி.மீ., தூரம் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் வருவதற்கு முன், எர்ணாபுரம் பஸ் ஸ்டாப் முக்கிய பஸ் நிறுத்தமாக இருந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு போக்குவரத்து கழகத்துக்கும் பலமுறை புகார் செய்யப்பட்டது. முந்தைய கலெக்டர் மதுமதி, எர்ணாபுரத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும், என அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஒரு சில பஸ்கள் நின்று சென்றன. தற்போது, ஒரு சில பஸ்களை தவிர அனைத்து பஸ்களும் நிற்காமல் செல்கிறது. அதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பயணிகள் என பலரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களும் எர்ணாபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us