/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் 30ம் தேதி ஆலோசனைக் கூட்டம்மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் 30ம் தேதி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் 30ம் தேதி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் 30ம் தேதி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் 30ம் தேதி ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2011 11:25 PM
விழுப்புரம் : தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வெங் கடேசன் எம்.எல்.
ஏ., விடுத்துள்ள அறிக்கை:தே.மு.தி.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வரும் 30ம் தேதி மதியம் 2 மணிக்கு விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாய கூடத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது. உள் கட்சி தேர்தல் விரைவில் நடப்பதால் உறுப்பினர் அடை யாள அட்டைகளை புதுப்பிப்பது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்திற்கு வருவோர், யாருக்கும் மாலைகள், சால்வைகள் அணிவிக்க கூடாது.இவ்வாறு அறிக்கையில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


