/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் வசதி : சக்கரகோட்டை ராமநாதன் உறுதிமழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் வசதி : சக்கரகோட்டை ராமநாதன் உறுதி
மழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் வசதி : சக்கரகோட்டை ராமநாதன் உறுதி
மழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் வசதி : சக்கரகோட்டை ராமநாதன் உறுதி
மழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் வசதி : சக்கரகோட்டை ராமநாதன் உறுதி
ADDED : அக் 13, 2011 09:17 PM
ராமநாதபுரம் : 'சக்கரகோட்டை ஊராட்சி பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வாக வடிகால் வசதி அமைப்பேன்' என சக்கரகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் கூறினார்.
சக்கரகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'கை உருளை' சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து பேசியதாவது: அரசு கேபிள் 'டிவி' கட்டணத்தை விட 10 ரூபாய் குறைவாக வசூலிக்கப்படும். மழைநீர் தேங்காமல் இருக்க சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைப்பேன். அதுவரை டிராக்டர் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படும்.
அதிக இடங்களில், குப்பை தொட்டி அமைப்பேன். இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைப்பேன். பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பேன். நவீன கழிப்பிடம், குளியலறைகள் அமைப்பேன். மின்வசதியுடன் கூடிய மயானம் அமைப்பேன். இளைஞர்கள் சுயதொழில் தொடங்க இலவச பயிற்சி மையம் அமைப்பேன். தெருவிளக்குகளுக்கு எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்படும். சோலார் விளக்குகள் அமைப்பேன். நேருநகர், மகாசக்தி நகர், கீழசோத்தூரணி, மேலசோத்தூரணி, முல்லை நகர் ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.


