Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வத்திராயிருப்பு அருகே கன மழை:மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை:மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை:மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை:மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

ADDED : அக் 09, 2011 01:44 AM


Google News
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தில் மின்னல் தாக்கியதில், 25க்கும் மேற்பட்ட 'டிவி', கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.

சாத்தூரில் ஒருவர் பலியானார்.கூமாப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு சூறாவளி காற்றுடன், பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமசாமியாபுரம் மறவர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கணேசன், குருவையா உட்பட 25 பேர் வீடுகளில், 'டிவி', கம்ப்யூட்டர், 'பிரிட்ஜ்' கருகி சேதமுற்றன . அப்போது ஏற்பட்ட சத்தத்தால் பலரும் பீதியடைந்து, வீட்டை விட்டு வெளியெறினர்.சாத்தூர்: வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணி, 25. பெயின்டரான இவர், நேற்று இரவு 7.15 மணிக்கு, மடத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கி இறந்தார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us