/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
திற்பரப்பு : திற்பரப்பு அருவியில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய கேட்டு தே.மு.தி.க., முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கியது.
இது குறித்து ஜெகநாதன் கூறியதாவது:மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் இவ்வாறு கேட்பாரற்று கிடப்பது மாவட்டத்திற்கே அவமானம். தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளவர்களும், மற்ற மாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகள் எடுத்து கூறியும் பஞ்., நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாததால் மாவட்ட செயலாளரின் அனுமதியோடு போராட்டம் அறிவித்தேன்.ஆனால் கட்சி மேலிடம் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதேவேளை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கட்டுமான பொருட்கள் அருவியில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடக்குமானால் என் மீது கட்சி மேலிடம் எடுத்த முடிவால் வருந்தமாட்டேன். இவ்வாறு ஜெகநாதன் தெரிவித்தார்.


