Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பஞ்., தலைவர் பதவிக்குவாச்சாத்தி பெண் போட்டி

பஞ்., தலைவர் பதவிக்குவாச்சாத்தி பெண் போட்டி

பஞ்., தலைவர் பதவிக்குவாச்சாத்தி பெண் போட்டி

பஞ்., தலைவர் பதவிக்குவாச்சாத்தி பெண் போட்டி

ADDED : அக் 05, 2011 01:23 AM


Google News
அரூர்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் போட்டிஅரூர் யூனியனுக்கு உட்பட்ட பேதாதம்பட்டி பஞ்சாயத்தில் பேதாதம்பட்டி, வாச்சாத்தி, மல்லங்குட்டை, கூக்கடப்பட்டி, டி.புதூர், காந்திநகர், ஆத்தனூர், மாலகப்பாடி ஆகிய 8 கிராமங்கள் உள்ளன.

கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 887 வாக்காளர்களும், வாச்சாத்தியில் 750 வாக்காளர்கள் உள்ளனர். வாச்சாத்தி பாலியல் வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட அமுதா (எ) அமரக்கா பேதாதம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவருக்கு இரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கணவர் சுப்பிரமணி கூலி தொழிலாளி.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அமுதா கூறுகையில், ''தங்கள் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us