வரதட்சணை புகார் 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை புகார் 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை புகார் 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 16, 2011 11:22 PM
தேனி : அருப்புக்கோட்டை அருகே வடுகர்கோட்டையை சேர்ந்தவர் ஆர்த்தி,31.
இவருக்கும் தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த கண்ணனுக்கும் 2008 டிச.,15ல் திருமணம் நடந்தது.அப்போது 55 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளனர். கண்ணன் வெளிநாடு சென்று விட்டார். கண்ணனின் தந்தை ராமசாமி, தாய் ஜோதியம்மாள் ஆகியோர் கூடுதலாக 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கேட்டு ஆர்த்தியை கொடுமை செய்துள்ளனர். ஆர்த்தி புகாரில் தேனி மகளிர் போலீசார் கண்ணன், ராமசாமி, ஜோதியம்மாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


