"2ஜி' வழக்கில் குற்றச்சாட்டு பதிவு 22ம் தேதி சிறப்பு கோர்ட் உத்தரவு
"2ஜி' வழக்கில் குற்றச்சாட்டு பதிவு 22ம் தேதி சிறப்பு கோர்ட் உத்தரவு
"2ஜி' வழக்கில் குற்றச்சாட்டு பதிவு 22ம் தேதி சிறப்பு கோர்ட் உத்தரவு
ADDED : அக் 14, 2011 10:54 PM

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து, வரும் 22ம் தேதி உத்தரவிடப்படும்' என, டில்லி சிறப்பு கோர்ட் நேற்று அறிவித்தது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகளை, டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை கண்காணித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று (நேற்று முன்தினம்) நடந்த விசாரணையின் போது, 'இந்த வழக்கு எப்போது முடியும். இன்னும் விசாரணையே துவங்காமல் இருக்கிறதே. வழக்கு முடிவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகுமா' என, கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனி நேற்று பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து, வரும் 22ம் தேதி உத்தர விடப்படும். கனிமொழி உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, வரும் 24ம் தேதியில் இருந்து துவங்கும்' என்றார்.


