/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்
எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்
எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்
எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்
ADDED : அக் 11, 2011 02:21 AM
பள்ளிப்பட்டு : மின்னல் தாக்கி எல்லையில் பலியான ராணுவ வீரர் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஆர்.கே.பேட்டையை அடுத்த, பெரிய ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சதீஷ், 27. இவர், 2004, செப்., 22ம் தேதி முதல், ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் இந்திய எல்லை ஓரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் பணியில் இருந்த போது, மின்னல் தாக்கி சதிஷ், பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ராணுவத்தினர் சதீஷ் உடலை மீட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். எல்லையில் பலியான சதீஷ் உடல், 30 ராணுவ வீரர்களுடன் விமானம் மூலம் நேற்று காலை, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், காரில் அவரது சொந்த ஊரான பெரிய ராமாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சதீஷின் மரணம் பற்றி அறிந்த கிராம மக்கள், துயரம் அடைந்தனர். சதீஷ் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


