Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஏழை மாணவியருக்கு உதவிய "கோஜான்' கல்லூரி

ஏழை மாணவியருக்கு உதவிய "கோஜான்' கல்லூரி

ஏழை மாணவியருக்கு உதவிய "கோஜான்' கல்லூரி

ஏழை மாணவியருக்கு உதவிய "கோஜான்' கல்லூரி

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

செங்குன்றம் : படிக்க வசதியின்றி தவித்த, மூன்று ஏழை மாணவியரின், நான்காண்டுகால இலவசக் கல்விக்கு, கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி உதவி உள்ளது.சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன் மகள் ஜெயஸ்ரீ.

மற்றொரு மாணவி சுகாசினி. அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த, தையல் தொழிலாளி நடராஜனின் மகள் ÷ஷாபனா ஆகிய மூவரும், கவுன்சிலிங்கில் தேர்வாகியும், வசதியில்லாததால், படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்தனர்.இதையறிந்த, கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி நிர்வாகம், இவர்களுக்கு நான்காண்டிற்கான, இலவசக் கல்வியளிக்க முன் வந்தது. கல்லூரி செயலர் பாபு தலைமையில் நடந்த விழாவில், சர்வதேச இளைஞர் எக்ஸ்னோரா பொதுச் செயலர் நிஷா தோட்டா, கல்லூரி தாளாளர் பிருந்தா நடராஜன், விப்ரோ நிறுவன மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசகர் சுப்ரமணியன் ஆகியோர், மூன்று மாணவியருக்கும், கல்லூரியில் இணையும் உத்தரவை வழங்கினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us