ADDED : அக் 07, 2011 01:26 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே மாயமான பள்ளி மாணவியை, போலீஸார் தீவிரமாக தேடி
வருகின்றனர்.ப.வேலூர் அருகே காளிபாளையத்தை சேர்ந்தவர் பசுராஜா.
அவரது
வீட்டில், அவரது அண்ணன் மகள் ராதா(15) தங்கி, அங்குள்ள அரசு
மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தார். கடந்த, 3ம் தேதி
பள்ளி சென்ற ராதா, வீடு திரும்பவில்லை.உறவினர் வீடுகளில் தேடியும் அவர்
கிடைக்கவில்லை. அதுகுறித்து பசுராஜா, ஜேடர்பாளையம் போலீஸில் புகார்
செய்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், மாயமான பள்ளி மாணவி ராதாவை
தீவிரமாக தேடி வருகின்றனர்.


