ADDED : அக் 13, 2011 05:32 AM
தூத்துக்குடி:மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில்
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.தலைமை ஆசிரியர் சாமுவேல்தர்மராஜ்
மற்றும் பள்ளிதாளாளர் யோனா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
என்எஸ்எஸ் அலுவலர் ஜெபமரியா ஸ்டெல்லா, செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்
சுப்பிரமணியன், சாரணர் இயக்கம் பொறுப்பாளர் காரப்காபிரியேல் உட்பட ஏராளமான
மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.


