ADDED : ஆக 03, 2011 11:26 PM
விருதுநகர் : ம.தி.மு.க., நகர, ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம், வடக்கு ஒன்றிய செயலாளர் வி.
சீனிவாசன் தலைமையில் விருதுநகர் சுரேஷ் டால்மில் மண்டபத்தில் நடந்தது. நகர செயலாளர் ஆர். சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயவீர பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம். சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் கோதண்டராமன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எ. குணசேகரன் பேசினர். கிளை கழக, நகர் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


