ADDED : செப் 07, 2011 12:41 AM
திருப்பூர் : ஜெ.பி., நகரில் உள்ள முருகு பப்ளிக் நர்சரி, பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. * டி.கே.டி., ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் சவுகத் அலி தலைமை வகித்தார். கல்வியல் கல்லூரி முதல்வர் ராஜலதாபாய், செயலாளர் ஷகீலா பானு மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் முத்துக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய விருது பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் பேசினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.


