/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைநரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
ADDED : செப் 07, 2011 01:57 AM
காஞ்சிபுரம் : ''தமிழ்நாடு, நரிக்குறவர் நல வாரியத்தில், உறுப்பினர்களாக சேர விரும்பும் நரிக்குறவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,'' என, கலெக்டர் சிவசண்முகராஜா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: நரிக்குறவர்களின் முன்னேற்றத்திற்காக, அரசு நல வாரியம் அமைத்துள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும், நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினராக சேர விரும்புபவர், அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, போன்ற உடல் உழைப்புத் தொழிலில், ஈடுபட்டுள்ளவராக இருக்க வேண்டும். வயது, 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும். உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.உறுப்பினர்கள் அனைவருக்கும், பிரத்யேகமாக புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினராக சேர்ந்து, அடையாள அட்டை பெற்ற தேதியிலிருந்து, அவரும், அவருடைய குடும்பத்தினரும், பல நிதியுதவிகளைப் பெற தகுதி பெறுகின்றனர். விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இயற்கை மரண உதவியாக, 15 ஆயிரம் ரூபாய், ஈமச்சடங்கு உதவியாக 2,000 ரூபாய், கல்வி உதவித் தொகையாக, 1,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய் வரை, மகப்பேறு உதவி, கருச்சிதைவு, கருக்கலைப்பு போன்றவற்றுக்கு, 3,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய் வரை, திருமண உதவித் தொகையாக, 2,000 ரூபாய், மூக்குக் கண்ணாடி வாங்க 500 ரூபாய், முதியோர் உதவித் தொகையாக, மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.எனவே, நரிக்குறவர்கள் நல வாரியத்தில் சேர்ந்து பயன்பெறவும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


