Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நகராட்சிக்கான தகுதியே இல்லாத காங்கயம் அடிப்படை வசதியின்றி 72 ஆண்டாக அவதி

நகராட்சிக்கான தகுதியே இல்லாத காங்கயம் அடிப்படை வசதியின்றி 72 ஆண்டாக அவதி

நகராட்சிக்கான தகுதியே இல்லாத காங்கயம் அடிப்படை வசதியின்றி 72 ஆண்டாக அவதி

நகராட்சிக்கான தகுதியே இல்லாத காங்கயம் அடிப்படை வசதியின்றி 72 ஆண்டாக அவதி

ADDED : செப் 08, 2011 02:21 AM


Google News

காங்கயம் : நகராட்சி அந்தஸ்து பெற்றபோதும், குக்கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல், கடந்த 72 ஆண்டுகளாக காங்கயம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் நிறைந்த காங்கயம், கடந்த 1939, டிச., 6ல் கிராம ஊராட்சியாக செயல்பட்டது. 1956, பிப்., 16ல் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1963 ஏப்., 1ல் முதல் நிலை பேரூராட்சி; 1968 மார்ச் 9ல் தேர்வு நிலை பேரூராட்சியாக படிப்படியாக முன்னேறி, கடந்த 2010 ஜூன் 1ல் காங்கயம் நகராட்சி உதயமானது; நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 33 ஆயிரத்து 264.குக்கிராமங்களில் கூட, 'ஹைட்ராலிக்' குப்பை தொட்டி வைக்கப்பட்டு, அன்றாடம் குப்பை அள்ளப்பட்டு புறநகர் பகுதிகளில் கொட்டப்படுகிறது. ஆனால், நகராட்சி அந்தஸ்து பெற்ற காங்கயத்திலோ, சிமென்ட் குப்பை தொட்டி கூட வைக்கப்படவில்லை. வீட்டுக்கு வீடு வாசலில், சாக்கடையில் குப்பை தேங்கி, முறையாக அகற்றப்படாமல் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.குப்பையை அகற்ற இரண்டு லாரிகள் மட்டுமே உள்ளதால், தெருக்களில் சேகரமாகும் குப்பையை வாரம் ஒருமுறை கூட அகற்றுவது இல்லை. குப்பையை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்குவற்காக, சென்னிமலை ரோட்டில் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. உரமாக்குவதற்கு பதில், குப்பையை கொட்டி தீவைத்து எரிப்பதால், பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். காங்கயம் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கொடுமுடி காவிரி குடிநீர் திட்டம் நடைமுறையில் உள்ளது. காவிரி ஆற்றில், 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோதும், காங்கயத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும், ஒரு மணி நேரம் கூட வருவதில்லை. நகராட்சியின் வார்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் கழிவுகள் அள்ளப்படாமல், மண், குப்பைகள் தேங்கி, கழிவு நீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. நகர்ப்புற சாக்கடைகளை ஒருங்கிணைத்து, கரூர் ரோட்டில் உள்ள அகிலாண்டபுரம் குளத்தில் கலக்குமாறு வழி அமைக்கப்பட்டுள்ளது; நீண்ட காலமாக உள்ள இப்பிரச்னைக்கு இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த ஆட்சியில் பேரூராட்சி களில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை, காங்கயத்தில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கயம் நகராட்சியில் கமிஷனர், மேலாளர், கண்காணிப்பாளர், ஒரு சுகாதார மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலி யாகவே உள்ளன. ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் அரசு ஒதுக்குவதுடன், வருவாயிலும் முன்னிலையில் உள்ள காங்கயம் நகராட்சியில் அடிப்படை பிரச்னைகள் கூட இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. காங்கயம் ஊராட்சியாக செயல்படத்துவங்கியது முதல், கடந்த 72 ஆண்டுகளாக கூறிய புளித்துப்போன அதே வாக்குறுதிகளுடன், வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன, அரசியல் கட்சிகள்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us