ADDED : செப் 09, 2011 10:42 PM
விருதுநகர் : ''விடுமுறை நாட்களிலும், பயனாளிகள் பயன் பெறும் வகையில், நிகழ்ச்சி நடப்பதாக,'' தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில், 271 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: ஹாலிடே என்றால் ஜாலிடே என்பதை மாற்றி, விடுமுறை நாட்களிலும் பயனாளிகள் பயன் பெறும் வகையில் நிகழ்ச்சி நடக்கிறது.கடந்த அரசை மக்கள் நாடி சென்றனர், தற்போதைய அரசு மக்களை தேடி செல்கிறது. ஆட்சி அதிகாரத்தில் சித்து விளையாட்டு காட்டிய கருணாநிதி, தற்போது வீட்டில் முடங்கி கிடக்கிறார்,என்றார். கலெக்டர் மு. பாலாஜி தலைமை வகித்தார். ராமன் டி. ஆர்.ஓ., வரவேற்றார்.


