Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனும் பலி

கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனும் பலி

கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனும் பலி

கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனும் பலி

ADDED : செப் 28, 2011 11:44 PM


Google News

திருச்சி: திருச்சியில் குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்த மனைவியும், அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி பாலக்கரை நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிப்பவர் மொய்தீன் முகமது (28). இவரது மனைவி சாஜிதா பேகம் (25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மொய்தீன் முகமது சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னும் குடித்து விட்டு வருவது தொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், மனமுடைந்த சாஜிதா பேகம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதைப்பார்த்த கணவன் மொய்தீன் முகமது தீப்பிடித்த எரிந்த மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் சாஜிதா பேகமும், நேற்று காலை மொய்தீன் முகமதும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குடியால் அனாதையான குழந்தைகள்: கணவனின் குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே சாஜிதாபேகம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற மொய்தீன் முகமதும் தீக்காயம் பட்டு இறந்துவிட்டார். அவர்களின் மூன்று வயது பெண் குழந்தையும், ஒரு வயது ஆண்குழந்தையும் பெற்றோரை இழந்து விட்டனர். பரிதாபத்துக்குரிய நிலை அந்த குழந்தைகளுக்கு ஏற்பட குடிப்பழக்கம் காரணமாக அமைந்து விட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us