Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நில மோசடி வழக்கு நெல்லையில் 3 பேர் கைது

நில மோசடி வழக்கு நெல்லையில் 3 பேர் கைது

நில மோசடி வழக்கு நெல்லையில் 3 பேர் கைது

நில மோசடி வழக்கு நெல்லையில் 3 பேர் கைது

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் நில மோசடி வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பொன்மலைப்பட்டி பேன்ஸி நகரை சேர்ந்தவர் மனுவேல். இவருக்கு பாளை. கொக்கட்டிக்குளம் கிராமம் சங்கர் காலனியில் பிளாட் உள்ளது. அந்த இடத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக விற்றனர். இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்பு சிறப்புப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கமிஷனர் வரதராஜூ, குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயபாலன் உத்தரவுப்படி குற்றப்பிரிவு உதவி கமிஷனர், நிலமோசடி தடுப்பு சிறப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னரசு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாளை. கே.டி.சி., நகர் பாரதி நகரை சேர்ந்த சிதம்பரம்(36), தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த நாகூர்கனி(52), பாளை. மகாராஜநகர் டி.வி.எஸ்., நகரை சேர்ந்த கார்த்தீசன்(34) கைது செய்யப்பட்டனர். இவர்கள் நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை. சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பிரான்சிஸ் சேவியர், ராசய்யா, இசக்கியப்பன், ஜெகநாதன், தன்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us