/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கைது நடவடிக்கைக்கு பயந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய "மாஜி' எம்.எல்.ஏ.,கைது நடவடிக்கைக்கு பயந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய "மாஜி' எம்.எல்.ஏ.,
கைது நடவடிக்கைக்கு பயந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய "மாஜி' எம்.எல்.ஏ.,
கைது நடவடிக்கைக்கு பயந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய "மாஜி' எம்.எல்.ஏ.,
கைது நடவடிக்கைக்கு பயந்து நெஞ்சு வலிப்பதாக கூறிய "மாஜி' எம்.எல்.ஏ.,
ADDED : செப் 10, 2011 02:56 AM
நாமக்கல்: கைது நடவடிக்கைக்கு பயந்து, நெஞ்சு வலிப்பதாக கூறி 'அட்மிட்'
ஆவதற்கு திட்டமிட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றரை மணி நேரம்
காத்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு ஏற்பட்டது.
ப.வேலூர் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன், முன்னாள்
டவுன் பஞ்சாயத்து சேர்மன் பொன்னிமணி, வக்கீல் காமராஜன் ஆகியோர் நில
அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும், ப.வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில், மூவரும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வழக்கமான
பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
மூவரும் நல்ல நிலையில் உள்ளனரா என்பதை டாக்டர்கள் பரிசோதித்து சான்று வழங்க
வேண்டும். இந்தப் பணி நடக்க சிறிது நேரம் மட்டுமே பிடிக்கும். ஆனால்,
முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூவரும், ஏறத்தாழ மூன்றரை மணி
நேரம் மருத்துவமனையில் இருந்துள்ளனர்.
நெஞ்சுவலி எனக்கூறி, முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் மருத்துவமனையில்
'அட்மிட்' ஆவதற்கு நீண்ட நேரம் காத்திருந்தார். எனினும், போலீஸார் அவரை
'அட்மிட்' ஆக விடாமல் சேலம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே,
முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியனை, கட்சிப் பாகுபடின்றி, தி.மு.க.,
அ.தி.மு.க., பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதில், தி.மு.க., மத்திய இணையமைச்சரான காந்திச்செல்வன் உதவியாளர் ஒருவர்,
நெடுஞ்செழியன் கைது செய்யப்பட்டு மருத்துமவனைக்கு கொண்டு வந்து, பின்
ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும் வரை காத்திருந்தார்.


