ADDED : செப் 08, 2011 09:48 PM
கரூர்:கரூர் அருகே வாலிபர் குரல்வளை அறுத்து கொலை.கரூர் மாவட்டம் குளித்தலை தோகமலை அருகே வேதாச்சலபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி.
இவரது மகன் முருகேசன் வயது 25, இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முருகேசன் மீது வெட்டு குத்து, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் இன்று தோகமலை சந்தைக்கு கீழ் முள்ளுக்காட்டில் முருகேசன் கழுத்து குரல்வளை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., இளங்கோ உள்ளிட்ட போலீசார் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.


