/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டிவீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டி
வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டி
வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டி
வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டி
ADDED : அக் 04, 2011 01:44 AM
வீரவநல்லூர் : வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.
வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட தலைவர் பதவிக்கு 14 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 81 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை வாபஸ் பெறும் நாளான நேற்று தலைவர் பதவிக்கு போட்டியிட மனு செய்திருந்த 14 பேரில் 5 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். மற்ற வேட்பாளர்கள் சிவசுப்பிரமணியன் (அதிமுக), மாரித்துரை (காங்.,), பேச்சிமுத்து (திமுக), பழனிச்சாமி (மா.கம்யூ.,) மற்றும் 5 பேர் சுயேட்சைகளாக களம் இறங்குகின்றனர்.
மொத்தம் 18 வார்டுகள் உள்ள கவுன்சிலர் பதவிக்கு 81 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 22 பேர் தங்களின் மனுவை வாபஸ் பெற்றனர். இதனால் 59 பேர் கவுன்சிலர் பதவிக்கு களம் இறங்குகின்றனர். இதில் 5வது வார்டில் கிருஷ்ணன், 8வது வார்டு சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகவலை தேர்தல் அதிகாரி சங்கரன் தெரிவித்தார்.


