/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கன்னியாகுமரியில் நவராத்திரி பரிவேட்டை : பாணாசுரனை வதம் செய்தார் அம்மன்கன்னியாகுமரியில் நவராத்திரி பரிவேட்டை : பாணாசுரனை வதம் செய்தார் அம்மன்
கன்னியாகுமரியில் நவராத்திரி பரிவேட்டை : பாணாசுரனை வதம் செய்தார் அம்மன்
கன்னியாகுமரியில் நவராத்திரி பரிவேட்டை : பாணாசுரனை வதம் செய்தார் அம்மன்
கன்னியாகுமரியில் நவராத்திரி பரிவேட்டை : பாணாசுரனை வதம் செய்தார் அம்மன்
கன்னியாகுமரி : பக்கவாத்தியம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி வந்த அம்பாள் பாணாசுரனை வதம் செய்த நவராத்திரி பரிவேட்டை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோயிலில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேவியை அலங்கார மண்டபத்தில் வெள்ளிகுதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அம்பாள் வேட்டைக்கு புறப்படல் ஆகியன நடந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனத்தின் இருபுறமும் நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுக்க ஸ்ரீதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் குதிரைகள், அணிவகுக்க முத்துக்குடை ஏந்திய பெண்கள் செல்ல நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம், செண்டை மேளம்ல பொம்மலாட்டம், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை, கேரள புகழ் தையல் ஆட்டம் என கண்கவர் நிகழ்ச்சிளுடன் அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னிதி தெரு, ரதவீதிகளை கடந்து மெயின்ரோடு, விவேகானந்தபுரம் ஜங்ஷன், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 5 மணியளவில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை வந்தடைந்தது, வாகனம் வரும் வழியில் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.


