சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி
சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி
சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி
ADDED : அக் 07, 2011 11:03 PM
கடலூர்:புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி இன்று திருப்பதி சீனுவாசன்
அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி
கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 6
மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து திருப்பதி சீனுவாசன்
அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6 மணிக்கு
ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக ராஜகோபாலன் கோவில் உள் புறப்பாடு
நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர்
கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார், பிரபு, நரசிம்மன் பட்டர், அலுவலர்கள்
சண்முகம், தீனதயாளன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


