Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மாநகராட்சி தேர்தலில் "உள்குத்து'

திருச்சி மாநகராட்சி தேர்தலில் "உள்குத்து'

திருச்சி மாநகராட்சி தேர்தலில் "உள்குத்து'

திருச்சி மாநகராட்சி தேர்தலில் "உள்குத்து'

ADDED : அக் 13, 2011 12:00 AM


Google News
திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஜெயாவுக்கு, 'உள்குத்து' காரணமாக ஓட்டு கேட்காத கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு, லோக்கல் அமைச்சர் மூலம், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் பதவியை கைப்பற்ற, திருச்சி அ.தி.மு.க., மகளிரணிச்செயலாளர் தமிழரசி, துணைச்செயலாளர் உமா, முன்னாள் கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, முத்துமாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பகீரத பிரயத்தனம் செய்தனர்.வழக்கம்போலவே, யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட வக்கீல் பிரிவுச்செயலாளர் ராஜேந்திரனின் மனைவி ஜெயா என்பவர் அறிவிக்கப்பட்டார்.

கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஜெயா, வேட்பாளர் என்ற அறிவிப்பு கட்சியினருக்கு அதிர்ச்சியாக இருந்தது.எதிர்ப்பை பதிவுச்செய்யும் வகையில், துணைச்செயலாளர் உமா தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு, மற்றவர்கள் தேர்தல் பணியாற்றுகின்றனர்.ஏற்கனவே, கடந்த 7ம் தேதி, மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் அறிமுகக்கூட்டம் என்ற பெயரில், ஒரு எச்சரிக்கைக் கூட்டம் அவசர, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டத்தில், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி பேசியதாவது:திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பலர், தங்களுக்காக ஓட்டு கேட்கும்போது, மேயர் வேட்பாளர் ஜெயாவுக்காக ஓட்டு கேட்பதில்லை.அவரின் படம் பொறித்த துண்டு பிரசுரங்களையும் விநியோகிப்பதில்லை. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் சென்றுள்ளது. நேற்றிரவு 12 மணிக்கு எங்களை அழைத்து உடனடியாக கூட்டம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.மேயர் வேட்பாளர் ஜெயா மட்டுமல்லாது, மேற்குத்தொகுதியில் உள்ள 21 வார்டுகளில், கூடுதலாக இடைத்தேர்தல் வேட்பாளர் பரஞ்ஜோதியின் படமும் அச்சிட்டு, அவருக்காகவும் ஓட்டு கேட்க வேண்டும்.திருச்சியில் பல வீடுகளில் ஆடு, மாடுகளை மக்கள் வைத்துள்ளனர். அதற்குப்பதில், இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்-டாப் வேண்டுமானால், ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று ஓட்டு கேட்கவேண்டும்.எதிர்தரப்பு வேட்பாளர்கள் கடுமையான போட்டியாளராக இருக்கும்பட்சத்தில், அவர்கள் குறித்த விபரங்களை மாநகர் மாவட்டச்செயலாளரிடம் கவுன்சிலர் வேட்பாளர்கள் அளிக்கவேண்டும்.வேட்பாளர்களுக்குள் எவ்வித பிரச்னையும் வேண்டாம். ஒரு சில வேட்பாளர்கள் பிரச்னையாக இருக்கின்றனர். ஒரு சில கவுன்சில் வேட்பாளர்கள், உங்களுக்குள் தகராறு செய்து கொள்கிறீர்கள்.நீங்களும் மற்ற கவுன்சில் வேட்பாளர்களும் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும். போட்டியிடும் 65 வேட்பாளர்களும் வெற்றிப்பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத, அ.தி.மு.க., மாநகராட்சியாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us