குற்றாலம் : குற்றாலம் சாரல் திருவிழாவின் 3வது நாளான நேற்று நீச்சல் போட்டி நடந்தது.குற்றாலம் நீச்சல் குளத்தில் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று நீச்சல் போட்டி நடந்தது.
8 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ட்ரீனா ஐரீன் முதலிடமும், சாய்ஷ்ரேயா இரண்டாமிடமும், பிரிஷ்கா மூன்றாமிடமும் பெற்றனர்.13 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் சுபாஷ் சங்கர் முதலிடமும், எபின்ஐவன் இரண்டாமிடமும், முத்துநாதன் மூன்றாமிடமும் பெற்றனர். 13 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் நிக்ஷன் முதலிடமும், நல்லவீரபாகு (எ) சிவா இரண்டாமிடமும், சுஜித்கிருஷ்ணா மூன்றாமிடமும் பெற்றனர். 8 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பெனடிக்டன் ரோஹித் முதலிடமும், ஆலன்ராய் இரண்டாமிடமும், அஜய் விஸ்வராஜ் மூன்றாமிடமும் பெற்றனர்.போட்டியின் நடுவர்களாக ராமேஸ்வரம் உதவி சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன், பிரேம்குமார் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரவில் நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது.


