ADDED : ஆக 29, 2011 12:06 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் நேற்று நல்லட்டிபாளையம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நல சிகிச்சை முகாம் நடந்தது.அரசு
மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: முகாமில் 3 பெண்களுக்கு குடும்ப நல
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
'லேப்ரோஸ்கோபிக்' மூலம் அறுவை சிகிச்சை
செய்வதால், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த இலவச முகாமை பயன்படுத்தி சிகிச்சை செய்து கொள்ளலாம், என்றனர்.
மகப்பேறு அறுவை சிகிச்சை டாக்டர் சுமதி, மயக்க மருந்து நிபுணர் மாரிமுத்து
உட்பட மருத்துவ குழு சிகிச்சையில் ஈடுபட்டனர்.


