ADDED : செப் 08, 2011 09:30 AM
கோவை: துடியலூர் அருகே நாயர்ஸ் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு தாளாளர் பாலன்நாயர் தலைமை வகித்தார். துணை முதல்வர் எசேக்கியல் முன்னிலை வகித்தார். விழாவில், பாலன்நாயர் பேசுகையில்,'எங்கு ஒரு பள்ளி திறக்கப்படுகிறதோ அங்கே ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. ஆசிரியர் பணி புனிதமானது. ஒரு நாட்டின் எதிர்காலத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஆசிரிய சமுதாயத்துக்கு உண்டு,'' என்றார்.
நாயர்ஸ் வித்யா மந்திர், கல்வியியல் கல்லூரி, ஆசிரிய பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.


