காரைக்குடி:ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி சார்பில், காரைக்குடி நகர
சிவன் கோயிலில் 1008 திரு விளக்கு பூஜை நடந்தது.கல்லூரி தாளாளர் சுவாமி
ஆத்மானந்த மக ராஜ் தலைமை வகித்தார்.
முதல்வர் செல்வராணி வரவேற்றார்.
புலவர் வள்ளியப்பன் அறிமுகவுரையாற்றினார். தமிழ் துறை தலைவர் மீனலோச்சனி,
தொழில் வணிக கழக தலைவர் முத்துபழனியப்பன், கோயில் நிர்வாக அலுவலர் பெரிய
கருப்பன், எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் மெய்யப்பன் பங்கேற்றனர். கமிட்டி
பொறுப்பா ளர்கள் லட்சுமணன், ராஜரத்தினம், சக்தி சேஷாத்திரி ஏற்பாட்டை
செய்திருந்தனர். ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.


