ADDED : ஆக 07, 2011 12:57 AM
சென்னை : 'அனைத்து கணினிமயமாக்கப்பட்ட தபால் நிலையங்களிலும், பி.எஸ்.
என்.எல்., செல் ஒன் வாடிக்கையாளர்கள், இனி, 'பில்' தொகையை செலுத்தலாம்' என, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி தெரிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும், பி.எஸ். என்.எல்., செல் ஒன் வாடிக்கையாளர்கள் பில் தொகையைச் செலுத்தலாம். 'பில்' தொகைக்கான கடைசி தேதிக்கு முன் கட்டப்படும் கட்டணங்கள் மட்டுமேஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


