மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்
மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்
மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்
ADDED : ஆக 28, 2011 12:42 AM
மதுரை : மதுரையில் 'தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான
சங்கம்' சார்பில் ஊர்வலம் மற்றும் மாநாடு நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்குதல், 3 சதவீத இடஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்தல், 40 சதவீதம் குறைபாடு உள்ளோருக்கு மாத உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்குதல், சுயதொழில் துவங்க அதிக மானியத்துடன் கடன் வழங்குதல் உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டன.மாநாட்டில் முன்னாள் எம்.பி., பிருந்தாகாரத், எம்.எல்.ஏ., அண்ணாதுரை, சங்க மாநில அமைப்பாளர் லட்சுமணன், செயலாளர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


