/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்புஊட்டியில் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ஊட்டியில் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ஊட்டியில் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ஊட்டியில் சைக்கிள் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 08, 2011 01:29 AM
ஊட்டி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி, வரும் 15ம் தேதி ஊட்டியில் நடத்தப்படுகிறது; போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டி, ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் வரும் 15ம் தேதி காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு 6 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ரொக்கமும், முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பெறுபவர்கள் மண்டல போட்டிக்கு தேர்வு பெறுவர். மண்டல போட்டியில் முதல் 4 இடங்களை பெறுபவர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். 'போட்டியில் பங்கேற்பவர்கள், இந்தியாவில் தயாரான சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் மாணவ, மாணவியரே பொறுப்பு ஏற்க வேண்டும்,' என மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.


