/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடியில் கட்சி பாகுபாடின்றி எம்.ஜி.ஆர்., தத்துவப்பாடல்கள்காரைக்குடியில் கட்சி பாகுபாடின்றி எம்.ஜி.ஆர்., தத்துவப்பாடல்கள்
காரைக்குடியில் கட்சி பாகுபாடின்றி எம்.ஜி.ஆர்., தத்துவப்பாடல்கள்
காரைக்குடியில் கட்சி பாகுபாடின்றி எம்.ஜி.ஆர்., தத்துவப்பாடல்கள்
காரைக்குடியில் கட்சி பாகுபாடின்றி எம்.ஜி.ஆர்., தத்துவப்பாடல்கள்
ADDED : அக் 07, 2011 12:17 AM
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி தலைவர்,
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள்
'லேட்டஸ்டாக' எம்.ஜி.ஆர்., பாடல்களை போட்டி பாடலாக மொபைல் போனில் (காலர்
ரிங் டோன்) வைத்து அசத்தி வருகின்றனர்.
குறிப்பாக, 'நான் உங்கள் வீட்டு
பிள்ளை... இது ஊரறிந்த உண்மை', 'சிரித்து வாழ வேண்டும்...பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே' என்ற எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களை அ.தி.மு.க.,
வேட்பாளர்களும், அவர்களுக்கு போட்டியாக தி.மு.க, வேட்பாளர்கள் 'உதய
சூரியனின் பார்வையிலே... உலகம் விழித்து கொண்ட வேளையிலே, ஆயிரம் கைகள்
மறைத்து நின்றாலும்...ஆதவன் மறைவதில்லை' 'போன்ற பாடல்களை காலர் ரிங் டோனாக'
வைத்து, அ.தி.மு.க., வினருக்கு போட்டியாக மொபைல் போனில் பிரசாரத்தை
துவக்கியுள்ளனர். குறிப்பாக, கரை வேட்டி கட்டியுள்ளவர்கள், கட்சி வேறு
பாடின்றி இப்பாடல்களை பதிந்து வைத்துள்ளனர்.


