/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள்12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சி.இ.ஓ., குப்புசாமி தகவல்.பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள்12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சி.இ.ஓ., குப்புசாமி தகவல்.
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள்12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சி.இ.ஓ., குப்புசாமி தகவல்.
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள்12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சி.இ.ஓ., குப்புசாமி தகவல்.
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள்12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் சி.இ.ஓ., குப்புசாமி தகவல்.
ADDED : ஆக 09, 2011 02:43 AM
விழுப்புரம் : பிளஸ் 2 தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென சி.இ.
ஓ., குப்புசாமி தெரிவித்துள்ளார்.வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 தனித் தேர்வுக்கு இம்மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தொல்வியடைந்த மாணவர்கள் 'எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 50 ரூபாயும், 35 ரூபாய் இதர கட்டணமாகவும் சேர்த்து மொத்தம் 85 ரூபாயும், இரண்டு பாடத்திற்கு 135 ரூபாயும் செலுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அல்லது அதற்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளி உள்ளவர்கள் மற்றும் 2011 செப்டம்பர் 1ம் தேதி 16 வயது நிரம்பியவர்களும் பிளஸ் 2 தேர்வு எழுத நேரடி தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இவர்கள் 'எச்பி' விண்ணப்பத்தை பயன்படுத்தி தேர்வு கட்டணமாக மொத்தம் 187 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவர்கள் அரசு கருவூலங்களில் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.தொழிற்பயிற்சி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் 2011 மார்ச் மற்றும் அதற்கு முன் தொழிற் கல்வி பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் பழைய பாடத் திட்டத்தின்படி வரும் 2011 செப்டம்பர், 2012 மார்ச் இரு தேர்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கு தேவையான விண்ணப்பங்கள் விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு சி.இ.ஓ., குப்புசாமி தெரிவித்துள்ளார்.


