
கிரண் பேடி தேர்தலுக்கு ரெடியா?
டில்லி மாநிலத்தில், ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தான், சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.
சேட்டனுக்கு இது தேவையா?
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தடாலடியாக எதையாவது அறிவித்து விட்டு, பின்னர், ஏன் தான் இப்படி அறிவித்தோமோ என, தலையைச் சொறிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இதுபோல் மீண்டும் ஒரு அனுபவம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக, முதல்வர் அலுவலகத்தில், இனிமேல், 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும் என, அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்தது. இதைப் பார்த்த முதல்வர், பெருமையுடன், தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டார். தன் அமைச்சரவையில் உள்ளவர்களிடம், 'என் திட்டங்களுக்கு, மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது பார்த்தீர்களா'என, பெருமையடிக்கவும், அவர் தவறவில்லை. உதவி மையம் திறக்கப்பட்டதும், அங்குள்ள தொலைபேசிக்கு அழைப்புகள் வரத் துவங்கின; பொதுமக்கள், தங்கள் குறைகளை தெரிவித்தனர். அடுத்த சில நாட்களில், முதல்வரை பாராட்டியும், திட்டியும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளை எப்படி சமாளிப்பது என, தெரியாமல் அங்கிருந்த ஊழியர்கள் திணறிப் போயினர். ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தால், அதுவும், சம்பந்தமே இல்லாமல், முதல்வரை பாராட்டியும், விமர்சித்தும் அழைப்புகள் வந்தால், பாவம் அவர்கள் என்ன செய்வர். இந்த பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஊழியர்கள் கூறியதை கேட்டதும், உம்மன் சாண்டியின் முகம் தொங்கிப் போய் விட்டது. 'உதவி மையத்தை மூடி விடலாமா' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், சாண்டி சேட்டன்.