Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் வெளியேற்றம்

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் வெளியேற்றம்

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் வெளியேற்றம்

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் வெளியேற்றம்

ADDED : ஆக 09, 2011 02:54 AM


Google News

பொள்ளாச்சி : கனமழையால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீர் தொடர்ந்து வெளியேறு

கிறது.சோலையாறு, நீராறு, பரம்பிக்குளம், வால்பாறை பகுதிகளில் பெய்யும் கனமழையால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரி நீர் அதிகளவில் வெளியேறுகிறது.சோலையாறு அணையில் 162.48 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,342 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து மானாம்பள்ளி பவர்ஹவுஸ் வழியாக 788 கனஅடியும், கேரளா சோலையாறு பவர்ஹவுஸ் வழியாக 620 கனஅடியும், சேடல் டேம் வழியாக 3,007 கனஅடியும் தண்ணீர் வெளியேறுகிறது.பரம்பிக்குளம் அணையில் 71.58 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,676 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையில் இருந்து தூண கடவு டனல் வழியாக 100 கனஅடியும், அணையின் ஸ்பில்வே மதகுகள் வழியாக 5,894 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 108.90 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 878 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து 186 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. திருமூர்த்தி அணையில் 33.35 அடியும், அமராவதி அணையில் 58.60 அடியும் நீர்மட்டம் உள்ளது.நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி மழையளவு (மீல்லி மீட்டரில்) :சோலையாறு - 17, பரம்பிக்குளம் - 15, ஆழியாறு - 5, தூணக்கடவு - 19, பெருவாரிப்பள்ளம் - 21, மேல்நீராறு - 45, கீழ்நீராறு - 19, வால்பாறை - 15, பொள் ளாச்சி - 2, மணக்கடவு - 1.2, நவமலை - 6, சர்க்கார்பதி - 4.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us