ADDED : ஆக 13, 2011 12:45 AM
கோவில்பட்டி : கோ.வெ.நா.சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் வணிக
நிர்வாகவியல் துறை கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் இயக்குநர்
வெங்கடாசலபதி தலைமை வகித்தார். மாணவி ஜென்ஸி வரவேற்றார். அதைத் தொடர்ந்து
துறைத் தலைவர் கவிதா பேசினார். விழாவில் ஜேசிஐ தலைவர் தயால் சங்கர்,
ஆசிரியர் பென்சன், புத்தக பை தயாரிப்பாளர் நீதிராஜா, கணிப்பொறி ரசீது
சீட்டு தயாரிப்பாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே குழு
கலந்துரையாடல், குறிக்கோளை எப்படி தீர்மானிப்பது, சுய மதிப்பீடு பற்றி
கருத்தரங்கம் நடத்தினர். அடுத்ததாக துறையைச் சார்ந்த மாணவர்கள்
இக்கருத்தரங்கம் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இறுதியாக
விழாவில் துறையைச் சார்ந்த மாணவர்கள் நன்றி கூறினர். கூட்டத்திற்கான
ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும்
மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.


