ADDED : அக் 03, 2011 11:01 PM
பெரியகுளம் : பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் லக்னோ மத்திய மித வெப்பமண்டல பழப்பயிர்களுக்கான ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி மையம் இணைந்து கருத்தரங்கம் நடத்தியது.
துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் தோட்டக்கலைத் துணை இயக்குனர் எச்.பி.சிங், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கத்தின் பதிவாளர் சுப்பையன், கோவை தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் குமார், பேராசிரியர்கள் ரவிசங்கர், கரிபசப்பா, விசால்நாத், பழப்பயிர் ஒருங்கிணைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மிஸ்ரா பேசினர். பேராசிரியர் செல்வராஜன் நன்றி கூறினார்.


