/உள்ளூர் செய்திகள்/மதுரை/மலேசியாவில் வேலை: ரூ.3.80 லட்சம் மோசடிமலேசியாவில் வேலை: ரூ.3.80 லட்சம் மோசடி
மலேசியாவில் வேலை: ரூ.3.80 லட்சம் மோசடி
மலேசியாவில் வேலை: ரூ.3.80 லட்சம் மோசடி
மலேசியாவில் வேலை: ரூ.3.80 லட்சம் மோசடி
ADDED : செப் 08, 2011 01:50 AM
மதுரை : மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.3.80 லட்சம் மோசடி செய்ததாக மதுரை சொக்கிக்குளத்தைச் சேர்ந்த பகுத்தறிவு என்பவர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் பொட்டவெளியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் பிரபாகர், சென்னை ஓட்டல் ஒன்றில் வேலை செய்தார். அங்கு பணியாற்றிய அனஸ்அலி என்பவர், மலேசியாவில் ஓட்டலில் வேலை இருப்பதாகவும், பகுத்தறிவை தொடர்பு கொண்டால் பிரபாகரை அனுப்பி வைப்பார் என்றும் நாராயணசாமியிடம் கூறினார். இதை நம்பி, ரூ.3.80 லட்சத்தை நாராயணசாமி கொடுத்தார். மலேசியாவிற்கு பிரபாகரை அழைத்துச் சென்ற பகுத்தறிவு, அங்கு ஒரு வழக்கில் கைதாகி பின் விடுவிக்கப்பட்டார். இதனால் எந்த வேலையிலும் சேர முடியாமல் தவித்த பிரபாகர், இந்தியா திரும்பினார். கொடுத்த பணத்தை தராததால், தல்லாகுளம் போலீசில் நாராயணசாமி புகார் செய்தார். பகுத்தறிவு மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


