
மோடிக்கு ரூட் கிளியர்
அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், அந்த கட்சியின் மேலிட தலைவர்களுக்குள், நீண்ட நாளாக மறைமுக யுத்தம் நடந்து வந்தது.
தாத்தாவுக்கு ஓகே; பேரனுக்குமா?
மகாராஷ்டிர மாநில போலீஸ் அதிகாரிகள், கடும் மன உளைச்சலில் உள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே வகையறாக்கள் தான், இவர்களின் மன உளைச்சலுக்கு காரணம்.பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு, ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, பால் தாக்கரேயின் பேரனும், சிவசேனா இளைஞர் அணி தலைவருமான ஆதித்ய தாக்கரேவுக்கும், தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆதித்யாவுக்கு, 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.இந்த பாதுகாப்பு போதாது என்று, மாநில அரசின் உத்தரவின்படி, ஆதித்யாவுக்கு சமீபத்தில், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாநில அரசுக்கு,இதனால் கூடுதல் செலவு பிடிக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களும், மன வருத்தத்தில் இருக்கின்றனர்.'என்ன இருந்தாலும், சிவசேனா எதிர்க்கட்சி; ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நம் தலைவர்கள், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தாக்கரே குடும்பத்துக்கு தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிப்பது எந்த வகையில் நியாயம்' என,மனதுக்குள் புழுங்கித் தவிக்கின்றனர்.மகாராஷ்டிர மாநில போலீசாரோ, 'தாத்தாவுக்கும், மகனுக்கும் பாதுகாப்பு அளிக்கலாம்; அதற்காக, பேரனுக்கும் பாதுகாப்பு என்பது கொஞ்சம், 'டூ மச்' தான்' என, 'உச்' கொட்டுகின்றனர்.


