ADDED : ஆக 06, 2011 06:40 PM
திருவாரூர்: திருவாரூர் சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி அங்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் கைதை கண்டித்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, அங்குள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனு பெற்றார்.


