நிலமோசடி வழக்கு: கருப்பசாமிபாண்டியன் கைது
நிலமோசடி வழக்கு: கருப்பசாமிபாண்டியன் கைது
நிலமோசடி வழக்கு: கருப்பசாமிபாண்டியன் கைது
UPDATED : செப் 10, 2011 04:46 PM
ADDED : செப் 10, 2011 06:06 AM
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையா புகாரின் பேரில் நெல்லை மாவட்ட தி.மு.க., செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ,அவரது சகோதரர் சங்கரசுப்பு, ஆகிய இருவர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கருப்பசாமி பாண்டியனை கைது செய்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் பாளையங்கோட்டை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கருப்பசாமிபாண்டியன்மதுரை சிறையில் அடைப்பதற்காக அழைத்து செல்லபட்டார். அவரது சகோதரர் சங்கரசுப்பு பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


