/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/24 மணி நேர சேவை மையம் : 20வது வார்டு குமார் தகவல்24 மணி நேர சேவை மையம் : 20வது வார்டு குமார் தகவல்
24 மணி நேர சேவை மையம் : 20வது வார்டு குமார் தகவல்
24 மணி நேர சேவை மையம் : 20வது வார்டு குமார் தகவல்
24 மணி நேர சேவை மையம் : 20வது வார்டு குமார் தகவல்
ADDED : செப் 27, 2011 09:19 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 20 வது வார்டுக்கு சுயேச்சையாக போட்டியிட குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், ''உறுப்பினராக தேர்வு செய்தால் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படும்.
கழிவு நீர் வடிகால் வசதி, தினமும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும். சிமென்ட் ரோடு இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து கொடுக்க பாடுபடுவேன். வார்டில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அலுவலகம் அமைத்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பேன். பராமரிப்பின்றி கிடக்கும் பாரதி நகர் ஊரணியை சீரமைக்க பாடுபடுவேன். கட்சி பாகுபாடின்றி செயல்பட 20 வது வார்டு வாக்காளர்கள் என்னை தேர்வு செய்ய வேண்டும்,'' என்றார்.


