கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்
கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்
கம்ப்யூட்டர் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆசையான ஆப்பிள் தோட்டம்:
வாழ்க்கைப் படிகள்:
ஸ்டான்போர்டு பல்கலையை நெகிழ வைத்த சொற்பொழிவு:'ஒவ்வொரு நாளும் இறுதி நாள் தான்':
அந்த உரையின் தொகுப்பு:நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்றுகதைகளை உங்களுடன்பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். முதல் கதைபுள்ளிகளை இணைப்பது. நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின்பயனாக, 'மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், 'டைப்போகிராபி'(அச்சுக் கலை) கொண்டது. 2வது கதை : 'லவ் அண்ட் லாஸ்' நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில்ஆப்பிள் நிறுவனத்தைதுவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என்நிறுவனத்திலிருந்து நான்வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 'நெக்ஸ்ட்' மற்றும் 'பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. 'பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான 'டாய் ஸ்டோரி' உருவானது. சில காலம் கழித்து ஆப்பிள்நிறுவனம், 'நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன்ஆப்பிளில் இணைந்தேன். மூன்றாவது கதை: இறப்புசிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.'உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான்எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள்இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். 'பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார் ஜாப்ஸ்
எது புதுமை:மற்ற மேதைகளை விட, வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில், தத்துவார்த்தமாக பார்ப்பவர் ஸ்டீவ் ஜாப். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் கூறிய சில கருத்துகள்:
பலருக்கும் பாடமாக இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை :கஷ்டப்பட்ட காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை...:
எட்டு அதிசயங்கள்:
ஸ்டீவ் ஜாப்சின் கண்டுபிடிப்புகள், உலக தொலைதொடர்பு உலகில் புரட்சியை ஏற்படுத்தின.
ஆப்பிள் 2:
'மெகின்டோஷ்' :
நெக்ஸ்ட்:
ஐமேக்:
ஐடியூன்ஸ்:
ஐபோன்:
ஐபேடு:


