/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சிஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி
ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி
தெனவ்காசி : ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி மைய துவக்க விழா நடந்தது.
மத்திய அரசின் இலவச வீட்டு உபயோக மின்சாதனங்கள் நீக்கும் பயிற்சியின் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய விரிவாக்க மையம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. அமர்சேவா சங்க செயலாளர் சங்கரராமன் தலைமை வகித்தார். டாக்டர் சரவணன் வரவேற்றார். சமுதாய வளர்ச்சி பாலிடெக்னிக் திட்ட அக ஒருங்கிணைப்பாளர் அசோக் ஜெயக்குமார், அமர்சேவா சங்க துணைத் தலைவர் சீனிவாசன், பொருளாளர் பட்டம்மாள் வாழ்த்தி பேசினர். திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளரும் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருமான ரமேஷ் சிறப்புரையாற்றினார். அமர்சேவா சங்க பயிற்சி மற்றும் முன்னேற்ற பிரிவு ஆலோசகர் பரமேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி ஆலோசகர் முத்துக்குட்டி, இளநிலை ஆலோசகர் கணபதி ராமசுப்பிரமணியன் செய்திருந்தனர்.


