"புற்றுநோய்க்கு திபெத்திய மருத்துவத்தில் சிறந்த மருந்து'
"புற்றுநோய்க்கு திபெத்திய மருத்துவத்தில் சிறந்த மருந்து'
"புற்றுநோய்க்கு திபெத்திய மருத்துவத்தில் சிறந்த மருந்து'
ADDED : ஆக 30, 2011 12:28 AM
சென்னை : ''புற்றுநோய்க்கு திபெத்திய மருத்துவத்தில் சிறந்த மருந்து
உள்ளது.
நோயின் தீவிரம் குறைந்து புற்றுநோயாளிகள் நீண்ட நாள்
வாழ்கின்றனர்,'' என திபெத்திய தலைமை மருத்துவர் டோர்ஜி ரப்டன் நெஷார்
கூறினார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி., கலைக்கூடத்தில், திபெத்திய
மருத்துவக் கண்காட்சி நேற்று துவங்கியது. இதில், மருத்துவர் டோர்ஜி பேசும்
போது, ''திபெத்திய மருத்துவத்துக்கு மத்திய அரசின், 'ஆயுஷ்' அங்கீகாரம்
வழங்கியுள்ளது. புற்றுநோயின் தீவிரத்தைக் குறைத்து, நோயாளியை இயல்பாக வாழச்
செய்வது தான் இம்மருத்துவத்தின் சிறப்பு,'' என்றார். வரும் 31ம் தேதி வரை
நடக்கும் இக்கண்காட்சியை, சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன்
துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, ''பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திபெத்திய மருத்துவத்தில் உள்ள சிறந்த
சிகிச்சை முறைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை தமிழர்கள்
எப்போதும் வரவேற்பர். அந்த வகையில், திபெத்திய மருத்துவத்துக்கு
தமிழகத்தில் வரவேற்பு இருக்கும்,'' என்றார். சி.பி.ஆர்., அறக்கட்டளை தலைவர்
சரோஜினி வரதப்பன், இயக்குனர் நந்திதா கிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்று,
மருத்துவக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். திபெத்திய மருத்துவ மூலிகைகளின்
மகிமைகளை விளக்கும் குறிப்புகள், படங்களுடன் கண்காட்சியில் இடம்
பெற்றிருந்தன. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் திபெத்திய மருத்துவக்
கல்லூரி உள்ளது. இங்கு, திபெத்திய மொழியில் பாடங்கள் கற்றுக்
கொடுக்கப்படுகின்றன. ஜோதிடத்தின் அடிப்படையில் நேரம், காலத்தைக் கணித்து
மருந்து கொடுப்பது, இந்த மருத்துவத்தின் தனிச் சிறப்பு என கண்காட்சியில்
விளக்கம் அளிக்கப்பட்டது.


