Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நில அபகரிப்பு வழக்கு தி.மு.க., நிர்வாகி சிறையில் கைது

நில அபகரிப்பு வழக்கு தி.மு.க., நிர்வாகி சிறையில் கைது

நில அபகரிப்பு வழக்கு தி.மு.க., நிர்வாகி சிறையில் கைது

நில அபகரிப்பு வழக்கு தி.மு.க., நிர்வாகி சிறையில் கைது

ADDED : செப் 06, 2011 01:40 AM


Google News

மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடியை, மற்றொரு நில அபகரிப்பு வழக்கில் போலீசார் சிறைக்கு சென்று கைது செய்தனர்.

உசிலம்பட்டி உச்சபட்டியை சேர்ந்த முருகன் புகார்படி, நில அபகரிப்பு வழக்கில், மின்னல்கொடி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹார்விபட்டியை சேர்ந்த ராமதாஸ் புகார்படி, மாஜி வி.ஏ.ஓ., கண்ணன், அவரது மைத்துனர் மின்னல்கொடி, நாகூர்கனி, ராஜூ ஆகியோர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே மின்னல்கொடி சிறையில் உள்ளதால், இவ்வழக்கில் அவரை கைது செய்ய, கோர்ட் பி.டி., வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் திருமால்அழகு நேற்று சிறைக்கு சென்று மின்னல்கொடியை கைது செய்தார். அவர், இவ்வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us