அப்போலோ ஆஸ்பத்திரியில் உணவு கண்காட்சி
அப்போலோ ஆஸ்பத்திரியில் உணவு கண்காட்சி
அப்போலோ ஆஸ்பத்திரியில் உணவு கண்காட்சி
ADDED : செப் 07, 2011 02:47 AM
மதுரை : மதுரை அப்போலோ ஆஸ்பத்திரியில் ஊட்டச்சத்து வாரத்தையொட்டி உணவு கண்காட்சி நடந்து வருகிறது.
கண்காட்சியை தலைமை செயல் அதிகாரி ரோகிணிஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி குறித்து உணவியல் நிபுணர் சுகன்யா கூறியதாவது: சரியான உணவுப் பழக்கத்தை அறியாததால் குழந்தைகள் முதல் முதியோர் வரை உடல் எடை அதிகரிப்பு அல்லது எடை குறைவு போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். எடை அதிகரிப்பால் சிறு வயதிலேயே ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். சமச்சீரான உணவு பற்றிய விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் கண்காட்சியில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம் இடம்பெற்றுள்ளது. காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், சைவ, அசைவ உணவுகளின் பயன்கள், சாதக, பாதக விஷயங்கள் கண்காட்சியில் உள்ளன. இன்று பள்ளி மாணவர்கள்
பார்வையிடுகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு, 'சமைக்காத உணவு' தயார் செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். காய்கறிகளில் செதுக்கப்பட்ட ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.


