Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/"வெற்றி அறிவிப்பு வதந்தியை நம்பாதீங்க' : ஆளும் கட்சியினருக்கு அட்வைஸ்

"வெற்றி அறிவிப்பு வதந்தியை நம்பாதீங்க' : ஆளும் கட்சியினருக்கு அட்வைஸ்

"வெற்றி அறிவிப்பு வதந்தியை நம்பாதீங்க' : ஆளும் கட்சியினருக்கு அட்வைஸ்

"வெற்றி அறிவிப்பு வதந்தியை நம்பாதீங்க' : ஆளும் கட்சியினருக்கு அட்வைஸ்

ADDED : அக் 11, 2011 01:56 AM


Google News

விழுப்புரம் : ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்குவோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற வதந்தியை நம்ப வேண்டாமென ஆளும் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தரப்பில் சேர்மன், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு புதியவர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். கடந்த ஆட்சியின் போது சில இடங்களில் நடந்ததைப் போல், ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்கும் வேட் பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமென கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்பு பேச்சுக்களை காதில் வாங்கி வரும் தி.மு.க., உள்ளிட்ட எதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் அதிருப்தியில் பணியாற்றி வருகின்றனர். நேர்மையான முறையில் தேர்தல் நடக்குமென தேர்தல் அதிகாரிகள் தரப்பில் திட்டவட்டமாக அறிவித்தும், செல்வாக்கிழந்த சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் விசிட் அடித்து கண்காணிப்பு பணிகளை துவக்கியுள்ளார். அனைத்து கட்சியினரும், சுயேச்சைகளும் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ளனர். விழுப்புரத்தில் கட்சி பிரமுகர்களிடம் தேர்தல் ஆலோசனை நடத்திய அமைச்சர் சண்முகம், கடந்த சட்டசபை தேர்தலைப் போல் முழு மூச்சுடன் கட்சியினர் பணியாற்றிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் பின் தங்குபவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமென வதந்தி பரப்புவதை ஒருபோதும் நம்பி ஏமாற வேண்டாம். நேர்மையான முறையில் தேர்தல் நடக்கும். ஆட்சியின் சாதனைகளைக் கூறி வெற்றி பெற உழைக்க வேண்டுமென கூறினார்.



பேரூராட்சி, கிராமங்களில் சுற்றிவரும் அமைச்சரின் சகோதரர் ராதாகிருஷ்ணன், கிராமங்களில் கூட்டங்களைப் போட்டு கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆளும் கட்சியென்பதால் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்படுமென நம்பி ஏமாந்துவிட வேண்டாம். சட்டசபை தேர்தலைப் போல் கோஷ்டிகளை மறந்து ஒற்றுமையாக பணியாற்றுங்கள் என ஆலோசனை கூறி வருகிறார். இதனை மெய்பிக்கும் வகையில் தீவிரமாக தேர்தல் பணியாற்றிட ஆளும் கட்சி தரப்பிலிருந்து சேர்மன், கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us