பிரஷாந்த் பூஷனுக்கு கோர்ட் சேம்பரில் அடி உதை; ஒருவர் கைது
பிரஷாந்த் பூஷனுக்கு கோர்ட் சேம்பரில் அடி உதை; ஒருவர் கைது
பிரஷாந்த் பூஷனுக்கு கோர்ட் சேம்பரில் அடி உதை; ஒருவர் கைது

வலுவான லோக்பால் மசோதா வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அன்னா குழுவில் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இடம்பெற்றிருந்தார். மத்திய அரசுடன் அன்னா குழு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பிரஷாந்த் பூஷன் பேட்டியளித்தார். அவர் தனது பேட்டியில், காஷ்மீரில் ராணுவத்தை வாபஸ் பெறலாம் எனவும், காஷ்மீர் மாநிலத்தவர்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பாத பட்சத்தில், சுயஉரிமை நிர்ணயம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் வளாகத்திலுள்ள அவரது அறையில் மீடியாவிற்கு பிரஷாந்த் பூஷன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது அங்கு நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரஷாந்த் பூஷன் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் சுதாரித்து கொண்டு தாக்குதல் நடத்திய நபரிடமிருந்து பிரஷாந்த் பூஷனை மீட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் பகத்சிங் கிராந்தி சேனா என்ற அமைப்பை சேர்நதவர்களாக இருக்கலாம் என போலீசார் கூறினர். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து பிரஷாந்த் பூஷன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு பின்னர் பேட்டியளித்த பிரஷாந்த் பூஷன், காஷ்மீர் மாநிலம் குறித்து தான் கூறிய கருத்துக்களால் எரிச்சலடைந்தவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறினார்.
தாக்குதல் குறித்து பேட்டியளித்த அன்னா குழுவில் இடம்பெற்றவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான கிரண்பேடி, பிரஷாந்த் பூஷனை தாக்கிய செயல் அதிர்ச்சியளித்தது. இது கூலிப்படையினரின் செயலாகும் என கூறினார்


